ஓரு பறவைக்கான
சங்கேத மொழியை
பேசிக்கொண்டிருந்தது அக்குழந்தை...
கி..கி..என்றோ... கூ..கூ..என்றோ...
அதற்கு தெரிந்தபடி...
ஏதோவொரு மனப்பிறழ்வில்
ஒரு ஆண்மயிலின் குரலை
பெண் மயிலுடன் சேர்ந்து பரிகாசித்தது...
எல்லாம் கண்டதுபோல் எதிர்வீட்டு நாயும்
தன்பங்குக்கு குரைத்துகொண்டிருக்கிறது...
(தின்றுவிட்டு திண்ணையிலிருக்கச்சொன்னால் உண்டுவிட்டு ஊர்மேல்போகும் கூட்டம்தானே அது.....)